×

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 366 புதிய கழிப்பறைகள் கட்டி முடிப்பு: சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை: தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 366 புதிய கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியின் சார்பில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 954 பொதுக்கழிப்பறைகள் உள்ளன. இந்தக் கழிப்பறைகள் பொதுமக்கள் கட்டணமில்லாமல் பயன்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது. சென்னை மாநகரில் பொதுமக்களுக்கு நல்ல சுகாதார வசதிகளை ஏற்படுத்தித் தருதல் மற்றும் திறந்தவெளியில் மலம் கழிப்பதைத் தவிர்த்தல் ஆகியவற்றை முக்கிய நோக்கமாக கொண்டு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஏற்கனவே உள்ள கழிப்பறைகளை சுகாதாரமாக பராமரித்தல் மற்றும் புதிய கழிப்பறைகள் கட்டுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் 492 இடங்களில் புதிய கழிப்பறைகள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் 366 கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும், 100 கழிப்பறைகளை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. 26 கழிப்பறைகளை கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து, 2023-24ம் ஆண்டில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 352 இடங்களில் 1,046 இருக்கைகளுடன் கூடிய 215 புதிய கழிப்பறைகளும், 265 புதிய சிறுநீர் கழிப்பறைகளும் புதியதாக கட்டப்பட உள்ளன. மேலும், பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் கழிப்பறைகள் கட்ட மாநகராட்சியின் 1913 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால், சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு கழிப்பறைகள் கட்ட மாநகராட்சியின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்.

The post தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 366 புதிய கழிப்பறைகள் கட்டி முடிப்பு: சென்னை மாநகராட்சி தகவல் appeared first on Dinakaran.

Tags : Corporation ,Chennai ,Chennai Corporation ,Dinakaran ,
× RELATED சென்னை மாநகராட்சியில் இணைய வழியில்...